2015ஆம் ஆண்டுக்கு பிந்தைய வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை பன்முகங்களிலும் செயல்படுத்துவது குறித்து, ஐ.நாவுக்கான சீனாவின் துணை நிரந்தர பிரதிநிதி வாங் மின் 8ஆம் நாள் ஐ.நா பேரவையின் இரண்டாவது குழுவுக்கு ஆலோசனையை முன்வைத்தார். இவ்வளர்ச்சி நிரலை சீனா ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்தி, உலகின் வளர்ச்சிக்கு சளையாத முயற்சியை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
வளர்ச்சியை முதன்மை கடமையாகக் கொண்டு, சீர்திருத்தத்தை ஆழமாக்கி, வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி, பொருளாதாரத்தின் தொடர்ச்சியான, சீரான வளர்ச்சியை சீனா விரைவுபடுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.