இலங்கை தலைநகர் கொழும்பில் சீனா நிதியுதவியின் கீழ் கட்டமைக்கப்பட்டு வரும் துறைமுகத் திட்டப் பணியை பரிசீலனை செய்யும் வகையில் புதிய குழுவை அமைக்க இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
சீனாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பு நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் கொழும்பில் 140 கோடி டாலர் மதிப்பில் துறைமுகத் திட்டம் கடந்த மார்ச் திங்கள் தொடங்கப்பட்டது. அதன்பின்னர், சில பிரச்னைகள் காரணமாக அத்திட்டத்தை மைத்ரிபால சிறிசேனா அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், அத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக புதிய குழுவை அமைத்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னா கூறுகையில், துறைமுகத் திட்டப்பணியில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால், அத்திட்டப்பணியை மீண்டும் தொடர முடியும். அடுத்த 6 திங்களுக்குள் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.