இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்வது தடையான பிறகு, தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விநியோகஸ்தர்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது நேபாள எண்ணெய் நிறுவனம், சர்வதேச அளவிலான ஒப்பந்தப் புள்ளிக்கான அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது. இப்பொது அறிவிப்பு அந்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாகும்.
பெட்ரோலியப் பொருள்களின் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க நேபாள அமைச்சரவை உத்தரவிட்டபிறகு, நேபாள எண்ணெய் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.