"வந்தாரை வாழ வைக்கும் ஊரு…." என்ற தமிழ் திரைப்பட பாடலுக்கு சீனாவின் ஜுவாங்ஜோ நகர் சரியாகப் பொருந்தும். தெற்கு சீனாவில் அமைந்துள்ள இந்த ஊர் (புஜியன் மாநிலம்), கடலுக்கு அருகிலே இருப்பதுவே அதற்கான காரணம். வரலாற்றின்படி, இந்த ஜுவாங்ஜோ துறைமுகத்திலிருந்து தான் முந்தைய பட்டுப்பாதை தொடங்கியது.