ஜப்பானின் அணு மூலப் பொருட்கள் பிரச்சினை தொடர்பான ஆய்வு அறிக்கையை சீன கல்வியியல் நிறுவனம் ஒன்று 9-ஆம் நாள் வெளியிட்டது. அதிக நுண்ணுர்வுள்ள அணு மூலப்பொருட்களை ஜப்பான் நீண்டுகாலமாக சேமித்து வருகின்றது. அதன் சேமிப்பு அளவு, அந்நாட்டின் உண்மையான தேவையையும் பெரிதும் தாண்டியுள்ளது. அணு பாதுகாப்பு, அணு பரவல், அணு பயங்கரவாதம் ஆகிய மூன்று துறைகளிலான இடர்பாடுகளை, இது ஜப்பானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும், ஏன் உலகிற்கும் உருவாக்கும் என்று இந்த ஆய்வு அறிக்கையில் கருத்து தெரிவிக்கப்படுகின்றது.
அதே நாள், இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா ச்சென்யிங் அம்மையார் பேசுகையில், ஜப்பானின் அணு மூலப் பொருட்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில், நல்லெண்ணம் மற்றும் பொறுப்புடன் கூடிய மனப்பான்மையை ஜப்பானிய தரப்பு வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.