• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவுக்கான சீனத் தூதர் இந்திய விருந்தினர்களுடன் பேச்சு
  2015-11-23 11:20:27  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவுக்கானச் சீனத் தூதர் லே யுசேங் 21ஆம் நாள் தூதரகத்தில் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளரும், சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதருமான நிருபாமா ராவ்வைச் சந்தித்து, இருநாட்டுறவு பற்றி அவருடன் கருத்துக்களைப் பரிமாறினார்.

லே யுசேங் பேசுகையில், சீன-இந்திய உறவு பெரும் வளர்ச்சி வாய்ப்பை எதிர்நோக்குகிறது. இந்தியாவுடன் இணைந்து பாடுபட்டு, உயர் நிலை தொடர்பை நிலைநிறுத்தி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை விரிவாக்கி, இருநாட்டுறவின் வளர்ச்சிக்கு புதிய தெம்பூட்ட சீனா விரும்புகிறது என்று கூறினார்.

அதேநாள், இந்திய மக்கள் அவையின் தலைமைச் செயலாளர் அனுப் மிஸ்ரா அழைப்பை ஏற்று சீனத் தூதரகத்துக்கு வருகை தந்தார். அவர் லே யுசேங்குடன் இருநாட்டுறவு மற்றும் நாடாளுமன்றத் தொடர்பு பற்றி அன்பான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய-சீன உறவில் காணப்பட்ட முன்னேற்றத்தை பாராட்டிய மிஸ்ரா, சீனாவுடன் நட்பு ஒத்துழைப்பை வளர்ப்பதில் ஆர்முடன் உள்ளது என்றும், இந்திய மக்கள் அவை இருநாட்டுறவின் வளர்ச்சி நிலையை உயர்த்துவதற்கு பாடுபட விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040