2015ஆம் ஆண்டு உலக இயந்திர மனித மாநாடு, நவம்பர் திங்கள் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளின் அறிவியல் தொழில் நுட்பத் துறை, தொழிற்துறை ஆகியவற்றுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இயந்திர மனித அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு மற்றும் தொழில் மயமாக்கத்தின் வளர்ச்சிப் போக்கை முன்னேற்ற விரும்புவதாக ஷி ச்சின்பீங் தெரிவித்தார்.
சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங்கும் இம்மாநாட்டுக்கு, வாழ்த்து தெரிவித்தார்.
12 இயந்திர மனித சர்வதேச அமைப்புகளும், 58 உள்நாட்டு அறிவியல் ஆய்வு நிறுவனங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டன. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டின் 100க்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இந்த இயந்திர மனித கருத்தரங்கில் கலந்து கொண்டன.