வெடிக்க கூடிய இடுப்புப் பட்டை என ஐயத்துக்குரிய பொருள், 23ஆம் நாள் பிற்பகல் பாரிஸின் புறநகரிலுள்ள ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து கண்டறியப்பட்டது. அதற்கும் கடந்த 13ஆம் நாள் பாரிஸில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து காவற்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்று பிரான்சின் செய்தி வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.