பாகிஸ்தான் காவற்துறை பெஷாவர், சுவாபி முதலிய பிரதேசங்களில் தேடுதல் வேட்டை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதில் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் செய்தி ஊடகம் நவம்பர் திங்கள் 22ஆம் நாள் அறிவித்துள்ளது.
தேடுதல் வேட்டை நடவடிக்கைகளின் மூலம், உள்ளூர் பாதுகாப்பு நிலைமை மேம்படும் என்று காவற்துறையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் வடமேற்கிலுள்ள தென் வஸ்திரிஸ்தான் பழங்குடியினப் பிரதேசத்தில் சாலை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.