பிரிட்டன் தலைமை அமைச்சர் டேவிட் கேமரூன் புதிய தேசிய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நெடுநோக்கு பற்றிய அறிக்கையை 23ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, பாதுகாப்புப் படைக்கலத்தை மேம்படுத்தவும், விரைவுப் படையை உருவாக்கவும், எதிர்வரும் 10ஆண்டுகளில் பிரிட்டன் 27ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்கும் என்று தெரிய வந்துள்ளது.
கேமரூன் கூறுகையில், பிரிட்டன் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரித்து வருகின்றன. அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் பிரிட்டனுக்கு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.