காலநிலை மாற்ற உடன்படிக்கை பற்றி பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் தலைவர்களின் வேண்டுகோள்
பாரிஸ் காலநிலை மாற்ற மாநாடு விரைவில் துவங்கவுள்ளது. இது குறித்து, சீனா, இந்தியா, பிரேசியல், அமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த நாடு கடந்த தொழில் நிறுவனங்களின் 79 தலைவர்கள் கூட்டாக கடிதத்தை வெளியிட்டுள்ளனர். உலகில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் பன்னாட்டுத் தலைவர்கள், பயனுள்ள காலநிலை உடன்படிக்கையை எட்ட வேண்டும் என்று இக்கடிதத்தில் அவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
கடந்த சில மாதங்களில், காலநிலைப் பிரச்சினை பற்றி சுமார் 150 நாடுகள் வாக்குறுதி அளித்தப் பிறகு, அரசுகளுக்கு உலக தொழில் நிறுவன வட்டாரங்கள் மேலும் ஆதரவு அளிப்பதாக அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.