வழிமுறைகள் மூலம், வன்முறை தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவது, இஸ்ரேல்-பாலஸ்தீனச் சூழ்நிலையின் அமைதியை மீண்டும் நிறைவேற்றுவது, பிரதேசச் சூழ்நிலை, சிரியாவின் சூழ்நிலை மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து, பெஞ்சமின் நெதன்யாகுவும், ஜான் கெர்ரியும் பேச்சுவார்த்தை நடததினர் என்று இஸ்ரேல் தலைமையமைச்சரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜான் கெர்ரி, மஹ்மூத் அப்பாஸுடன் நவம்பர் 24ஆம் நாளிரவு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமைதியான சூழ்நிலையை மீண்டும் ஒற்படுத்த வேண்டுமென ஜான் கெர்ரி, கேட்டுக் கொண்டார் என்று பாலஸ்தீன அரசுச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.