அமெரிக்கப்படை அக்டோபர் திங்களில் ஆப்கானிஸ்தானிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மீது தவறுதலாக வான்தாக்குதல் நடத்திப் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. படையினரின் பிழை தான் அதற்கான முக்கிய காரணமாகும் என்று ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோவின் ராணுவத் தலைமைத் தளபதி ஜோன்﹒காம்ப்பேல் 25ஆம் நாள் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தப் பிழை முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தலிபான் இயக்கம் கைப்பற்றிய கட்டிடம் என தவறுதலாகக் கருதியதால், அமெரிக்கப்படை இத்தாக்குதலை நடத்தியது. ஆனால், அது கோன்தோஸ் மாநிலத்தில் சர்வதேச மருத்துவச் சிகிச்சை அமைப்பின் ஒரு மையமாகும் என்றார்.