பாரிஸ் நகரில் 13ஆம் நாள் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்ததன் காரணமாக, நவம்பர் திங்கள் இறுதியில் துவங்கும் காலநிலை மாற்ற மாநாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், 11 ஆயிரம் காவல்துறையினரையும் ஆயுதப் படையினரையும் ஈடுபடுத்துவதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் பெர்நார்ட் காசெனெயூவ் 25ஆம் நாள் தெரிவித்தார்.
மேலும், அவசர நிலைமை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிக்குத் தடை விதிக்க பல்வேறு மாநிலத் தலைவர்களுக்கும் அதிகாரம் உண்டு என்றும் அவர் கூறினார்.
தவிரவும், வரும் 29, 30 ஆகிய நாட்களில், 6300 காவல்துறையினர், ஆயுதப் படையினர் மற்றும் சிறப்பு பிரிவினர்களையும் ஈடுபடுத்தி, தலைநகர் பாரிஸின் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் என்று உள்ளூர் காவல்துறை அறிவித்துள்ளது.