அவர் மேலும் கூறுகையில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக் கருத்தரங்கின் ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டை நடத்துவது, ஆப்பிரிக்க நாடுகளின் பொது எதிர்பார்ப்பாகும். சீன-ஆப்பிரிக்க உறவின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. வளரும் நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் இது உறுதுணையாக இருக்கும். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு நட்புறவைப் புதிய நிலைக்குக் கொண்டு வர, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களுடன் கூட்டாக முயற்சி செய்வார் என்றார்.