• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில் தாக்குதல்
  2015-11-27 09:27:34  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தான் உறைவிட மற்றும் திட்டப்பணி துறையின் தலைவர் எக்ராம் கான் துரானியின் வாகன அணி, நவம்பர் 26ஆம் நாளிரவு, அந்நாட்டின் வட மேற்கு பகுதியில் வெடி குண்டு தாக்குதலுக்குள்ளானது. அதில் 2 காவற்துறையினர் உயிரிழந்தனர். 3 காவற்துறையினர் காயமுற்றனர். எக்ராம் கான் துரானி பாதிப்பின்றி தப்பினார்.

இதுவரை, இத்தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்பதாக எந்த அமைப்போ, தனிநபரோ அறிவிக்கவில்லை.

பாகிஸ்தான் அரசுத் தலைவர் மான்நூ ஹுசைன் மற்றும் தலைமையமைச்சர் முஹம்மது மியான் நவாஸ் ஷெரீப் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040