சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய இராணுவக் கமிட்டியின் சீர்திருத்தப் பணிக் கூட்டம் நவம்பர் 24 முதல் 26ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவரும் மத்திய இராணுக் கமிட்டித் தலைவருமான ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் பேசிய போது, தலைவர்களின் நிர்வாக அமைப்பு முறை, கூட்டு போர் கட்டுப்பாட்டு அமைப்பு முறை ஆகியவற்றின் சீர்திருத்தம் 2020ஆம் ஆண்டுக்குள் மாபெரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவப் படை சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, முழுமையான புரட்சிகரமான மாற்றமாகும். சீனத் தனிச்சிறப்புடைய நவீன இராணுவ அமைப்பு முறையை உருவாக்குவதற்குப் பயிற்சிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.