ஐஎஸ் அமைப்பின் மீதான பிரிட்டனின் வான் தாக்குதல் அளவை ஈராக்கிலிருந்து சிரியாவுக்குள் விரிவாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று பிரிட்டன் தலைமை அமைச்சர் டேவிட் கேமரூன் 26ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார். மேலும், சிரியா நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பிரிட்டன் அரசின் ஒட்டுமொத்த திட்டம் பற்றியும் அவர் விவரித்தார்.
பிரிட்டன் எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. ஐஎஸ் அமைப்பை ஒடுக்குவதற்கு, சிரியாவின் உள்நாட்டுப் போர் தீர்க்கப்படும் வரை காத்திருக்க முடியாது என்று கேமரூன் தெரிவித்தார்.
ஆனால், பிரிட்டனின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜேரெமி கோர்பின் கேமரூனின் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.