காமன்வெல்த் உச்சி மாநாடு 29ஆம் நாள் மால்ட தலைநகரான வாலெத்தில் முடிவடைந்தது.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட உறுப்பு நாடுகள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதித்துள்ளன. குறிப்பாக, நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச நடவடிக்கைகளின் மூலம், உலகிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள தீவிரவாதம், வன்செயல்கள், பயங்கரவாதம் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்று வெளியிட்ட செய்தி குறிப்பு கூறியது.
மேலும், காலநிலை மாற்றம் குறித்து, காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒத்த கருத்துக்கு வந்து, காலநிலை மாற்ற நடவடிக்கை பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் என்றும் இந்தச் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.