சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிகரம் என போற்றப்படும் ஜொல்மோ லுங்மா சிகரப் பகுதியின் உயிரின வாழ்க்கை சூழல் சீரடைந்துள்ளது. இப்பகுதியில் மனிதர்களின் நடவடிக்கையினால் காற்றில் கலக்கும் மாசுப் பொருட்களின் அளவு மிகவும் குறைவு. காற்றின் தரம் தூய்மையாக உள்ளது என்று தொடர்புடைய வாரியம் தெரிவித்துள்ளது.
நீண்டக்கால கண்காணிப்பு மூலம் கிடைத்துள்ள தரவுகளின்படி, ஜொல்மோ லுங்மா சிகரப் பகுதியின் நீர் மற்றும் காற்று மாசடையவில்லை. திபெத் பீடபூமியின் ஒட்டுமொத்த உயிரின வாழ்க்கைச் சூழல் மேம்பட்டு வரும் போக்கிற்கு இது பொருந்தியதாக உள்ளது என்று சீன அறிவியல் கழகத்தின் ஜொல்மோ லுங்மா காற்று மற்றும சுற்றுச்சூழல் பன்முகக் கண்காணிப்பு நிலையத்தின் துணைத் தலைவர் வாங் ச்சுங் யன் தெரிவித்தார்.