இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், வரும் 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சுற்றுப்பயணத்தின்போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்டரை அவர் சந்திக்க உள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒப்பந்தங்கள் குறித்து பரிசீலிக்கப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, அமெரிக்காவின் 145 எம்777 ரக ஹோவிட்சர்கள் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என்று பாரிக்கர் கோரிக்கை விடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.