மியன்மாருடனான நட்பார்ந்த கொள்கையை சீனா எப்போதும் கடைப்பிடிக்கி்ன்றது என்றும், இக்கொள்கை மாறப் போவதில்லை என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவா சுன் யீங் அம்மையார் 30ஆம் நாள் தெரிவித்தார்.
மியன்மார் தேர்தல் முடிவின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாடாளுமன்றத்தில் பெரும்பாலான இடங்களை வென்றுள்ளது. மியன்மாரில் அரசியல் நிலைமை நிலையாகி, பல்வேறு தேசிய இனங்கள் சுமுகமாக சகவாழ்வு நடத்தி, பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும் என்றும், பல்வேறு கட்சிகள் ஒன்றுபட்டு, நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.