நண்பர்களே, வணக்கம். நான் நிலானி. சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியில், ஷாங்காய் மாநகரின் சுற்றுப்புறத்திலுள்ள காட்சித்தலங்கள் பற்றி உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் தயாரா
துவக்கத்தில் பறவைகளைப் பிடித்திருக்கும் நண்பர்களுக்குத் தவறாமல் காணக்கூடிய காட்சித்தலம் ஒன்றை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அது துங்டேன் இடபெயரும் பறவைப் பாதுகாப்பு மண்டலம். அது ஷாங்காய் மாநகரிலுள்ள ஜூன்மின் தீவின் கிழக்குப் பகுதியில் இம்மண்டலம் அமைந்துள்ளது. இந்த மண்டலம் 30கோடி சதுர கிரோமீட்டர் நிலப்பரப்புடையது. உலகிலே இடபெயரும் காட்டுப் பறவைகளின் வாழ்விடங்கள் அதிகம் இல்லை. மிக குறைவாக காணப்படுபவைகளில் துங்டேன் இடபெயரும் பறவைப் பாதுகாப்பு மண்டலமும் ஒன்றாகும். தூய்மையான இம்மண்டலத்தில் பரந்துபட்ட கோரைப்புல் வயல் உள்ளது. கூட்டமாக பறக்கும் பறவைகள் காற்றில் அசைந்து செல்லும் மேகம் போலக் காணப்படுகின்றன. இடபெயரும் பறவைகள் வரும் போது, புகைப்படக் கலைஞர்கள் பலர் இங்கு வருவர். செய்தியாளர்களும் வந்து செய்திகளை சேகரித்துச் செல்வர். உங்களுக்கும் பறவைகள் பிடித்திருந்தால், இடபெயரும் பறவைப் பாதுகாப்பு மண்டலத்தைக் காணத் தவறாதீர்கள். மேலும், பறவைகளைக் கண்டுரசிக்கும் தலைசிறந்த நேரம், காலையாகும். கூட்டமான பறவைகள் மட்டுமல்ல, சூரிய உதயத்தையும் அப்போது கண்டுரசித்து மகிழலாம்.