நண்பர்களே, வணக்கம். நான் நிலானி. சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியில், ஷாங்காய் மாநகரின் சுற்றுப்புறத்திலுள்ள காட்சித்தலங்கள் பற்றி உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன். கேட்டு ரசிக்க நீங்கள் தயாரா?
இன்றைய நிகழ்ச்சியின் துவக்கத்தில் சீனாவின் முதலாவது நீர் நகர் சோச்சுவாங் சிறுநகர் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். சோச்சுவாங் சிறுநகர் ஷாங்காய் மாநகர், சுச்சோ மாநகர் மற்றும் ஹாங்சோ நகரத்தை ஒட்டியமைந்த பகுதியில் அமைந்துள்ளது. 900க்கும் மேலான ஆண்டுகள் வரலாறுடைய நகர் இதுவாகும். சுங் வம்சக் காலத்தில் கட்டியமைக்கப்பட்ட கோயிலின் அடிப்படையில் சோச்சுவாங் சிறுநகர் உருவானது. இச்சிறுநகரை அறிமுகப்படுத்தினால், ஒருவரைக் குறிப்பிடுவது இன்றியமையாதது. அவரின் பெயர் ஷேன்வன்சன். யுவான் வம்சக்காலத்தில் சீனாவின் மிகவும் வெற்றிகரமான வணிகராவார். அவரால் தான், சோச்சுவாங் சிறுநகர் ஒரு பெரிய வணிக நகரமாக மாறியுள்ளது. நிலவியல் மேம்பாட்டைப் பயன்படுத்தி, உணவு, பட்டு மற்றும் பல்வேறு கைவினைப் பொருட்களின் வணிக மையமாக சோச்சுவாங் மாறியுள்ளது. அதனாலே, இச்சிறுநகரில் பயணம் மேற்கொண்டால், இந்த வணிகரின் முந்தைய இல்லத்துக்குக் கண்டிப்பாகச் செல்ல வேண்டும். அது ஷேன்வேன்சன் அவரது புராணக்கதையின்படி மறுசீரமைக்கப்பட்டதாகும்.