• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இந்திய வெளியுறவு கலந்தாலோசனை
  2016-02-05 09:51:28  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் ஆசிய மற்றும் தூதரக அலுவலக விவகாரங்களுக்கான துணை அமைச்சர் கொங்ஸுவன்யோவும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசிய அலுவலகத்தின் தலைவர் பிரதீப் மோர் ராவத்தும் 3ஆம் நாள் புது தில்லியில் நடைபெற்ற இரு நாடுகளின் உறவு குறித்த ஆலோசனை கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
2015ஆம் ஆண்டு சீன-இந்திய உறவு பல சாதனைகளைப் பெற்றுள்ளதை இரு தரப்பும் வெகுவாக பாராட்டின. அதேபோல இவ்வாண்டும், இருப்புப் பாதை, தொழில் பூங்கா, வர்த்தக முதலீடு, மானிடப் பண்பாட்டியல், பாதுகாப்பு ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ஜெச்ஷங்கரைச் சந்தித்த கொங்ஸுவன்யோவ் பல்வேறு கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040