12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி 5ஆம் நாள் பிற்பகல் வட கிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கவுஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் துவங்கியது.
இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்காளத் தேசம், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2600 விளையாட்டு வீரர்கள் 23 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
நடப்பு விளையாட்டுப் போட்டி பிப்ரவரி 16ஆம் நாள் நிறைவடையும்.