2015ஆம் ஆண்டின் நடுப் பகுதி முதல் இதுவரை பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட மொத்தம் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சமூக வலைதளமான சுட்டுரை நிறுவனம் 5ஆம் நாள் அறிவித்தது. இந்தக் கணக்குகளில் பெரும்பாலானவை ஐ.எஸ் எனும் தீவிர அமைப்புடன் தொடர்புடையன என்று சுட்டுரை நிறுவனத்தின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புரோக்கிங் கழகத்தின் அறிக்கையின்படி, 2014ஆம் ஆண்டின் குறிப்பிட்ட 3 திங்கள் காலத்தில் ஐ.எஸ் அமைப்பு குறைந்தது 46 ஆயிரம் சுட்டுரை கணக்குகளைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.