சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ தனது ஆப்பிரிக்க பயணத்தை 6ஆம் நாள் முடித்து கொண்டு கொழும்பு வாயிலாக நாடு திரும்பினார். இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கலா சமரவீரா கொழும்பு விமான நிலைத்துக்குச் சென்று வாங்யீயுடன் குறுகிய சந்திப்பு நடத்தினார்.
மேலும், இலங்கை தலைமை அமைச்சர் ரனில் விகரமசிங்க தொலைபேசி மூலம் வாங்யீயை அழைத்து, இரு நாட்டு நட்புறவை வலுபடுத்த ஆக்கப்பூர்வ விருப்பம் தெரிவித்துள்ளார்.