வட கொரியா "தொலைத்தூர ராக்கெட்டைச்"செலுத்தியது குறித்து விவாதிக்கும் வகையில், ஐ.நா பாதுகாப்பவை அவசர கூட்டம் நடத்த வேண்டும் என அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன என்று ஐ.நாவின் தொடர்புடைய தூதாண்மை பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
வட கொரியா ஏவுகணையைச் செலுத்தியது, நிதானத்தைச் சீர்குலைக்கும் இன்னொரு ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும் என்றும், ஐ.நா பாதுகாப்பவையின் பல தீர்மானங்களை இது வெளிப்படையாக அத்துமீறியுள்ளது என்றும் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தாமிர் ரைஸ் அம்மையார் அன்று தெரிவித்தார்.