குவாங்மியோங்சொங்-4 என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை வட கொரியா 7ஆம் நாள் வெற்றிகரமாக செலுத்தியது என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் அன்று அறிவித்தது.
புதிதாக ஆராய்ந்து தயாரித்த இந்த செயற்கைக் கோளை, திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் வட கொரியா செலுத்தியுள்ளது என்று வட கொரியத் தேசிய விண்வெளி வளர்ச்சி ஆணையம் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
வட கொரியா செலுத்திய ஐந்தாவது செயற்கை கோள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.