ஜிகா வைரஸ் குறித்து மிக உயர்ந்த நிலை எச்சரிக்கை விடுப்பதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 8ஆம் நாள் அறிவித்தது. 2009ஆம் ஆண்டு சளிகாய்ச்சல் ஏ தொற்று நோய், கடந்த ஆண்டு எபோலா நோய் ஆகியவற்றுக்குப் பிறகு, மிக உயர்ந்த நிலையுடைய நோய் எச்சரிக்கையை அமெரிக்கா விடுப்பது இதுவே மூன்றாவது முறையாகும்.
Arborvirus, இன பெருக்க உடல் நலம், பிறப்பு மற்றும் வளர்ப்பு குறைபாடு துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட 300 பணியாளர்கள் அவசர தடுப்பு மையத்தில் ஜிகா வைரஸை எப்படி கையாள்வது என்பது தொடர்பான கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.