ரஷியாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த சதி செய்தது தொடர்பான ஐயத்தின் பேரில், ரஷியக் கண்காட்சி பாதுகாப்பு வாரியம் 7ஆம் நாள் யேகேடேரின்பெர்க் நகரில் ஐ. எஸ் அமைப்பின் 7 உறுப்பினர்களைக் கைது செய்துள்ளதாக ரஷியக் கூட்டாட்சி பாதுகாப்பு ஆணையம் 8ஆம் நாள் செய்தி வெளியிட்டது.
இந்த 7 பேர், ரஷியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். மாஸ்கோ, சென்ட் பீடேர்பெர்க் மற்றும் ஸ்வேர்ட்லோவ்ஸ்க் மாநிலம் ஆகிய இடங்களில், சொந்தமாக தயாரித்த வெடி சாதனங்களைப் பயன்படுத்தி, பயங்கரவாத தாக்குதலைத் தொடுக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்று இச்செய்தி கூறுகிறது.