சிரியா தலைநகர் டமாஸ்கஸில் 9ஆம் நாள் நிகழ்ந்த வாகன வெடி குண்டு தாக்குதலில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமுற்றனர் என்று சிரியா பாதுகாப்பு வாரியம் 9ஆம் நாள் தெரிவித்தது.
டமாஸ்கஸ் நகரின் வட கிழக்குப் பிரதேசத்தில், காவற்துறையினரின் பொழுதுபோக்கு மையம் ஒன்றின் வாகன நிறுத்த நிலையத்தில் இத்தாக்குதல் நிகழ்ந்தது என்று சிரியா பாதுகாப்பு வாரியத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.