வட கொரியா அண்மையில் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டு, எறிவிசை ஏவுகணை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, செயற்கை கோளைச் செலுத்தியதற்கு பதிலளிக்கும் வகையில், வட கொரியா மீது மேலும் கடுமையான தடை நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பான கருத்துருவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவை வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக அங்கீகரித்தது.
பெருமளவு ஆட்கொல்லி ஆயுதங்கள், படைக்கலங்கள், ஆடம்பரப் பொருட்கள், இணைய மூல குற்றம், மனித உரிமையை ஊறுபடுத்தல் ஆகிய துறைகளில் வட கொரியாவுடன் தொடர்பு கொண்டுள்ள தனிநபர் மற்றும் நிறுவனங்களின் மீது தடை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அரசுத் தலைவருக்கு இக்கருத்துரு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.