ஜப்பானிய அரசு 10ஆம் நாள் பிற்பகல் தேசியப் பாதுகாப்பு உத்தரவாத கூட்டத்தை நடத்தி, வட கொரியா மீது மேற்கொள்ளும் ஒருதரப்பு தடை நடவடிக்கைகளை அறிவித்தது.
இந்த தடை நடவடிக்கைகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதியில், 2014ஆம் ஆண்டில் அகற்றப்பட்ட "கடத்தல் பிரச்சினை" தொடர்பான முந்தைய தடை நடவடிக்கைகளை மீட்க வேண்டும். இந்நடவடிக்கைகளில் வட கொரிய குடியுரிமையைக் கொண்டுள்ள நபர்கள் ஜப்பானில் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்பது இடம்பெறுகின்றது. இன்னொரு பகுதி, புதிய தடை நடவடிக்கைகளாகும். மனித நேய உதவியாக, பத்து லட்சம் ஜப்பானிய யெனுக்குட்பட்ட பணத்தை தவிர்த்து, வட கொரியாவுக்கு பணம் அனுப்புவதற்குத் தடைவிதிக்க வேண்டும். வட கொரியத் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்ற மூன்றாவது நாட்டின் கப்பல்கள் ஜப்பானியத் துறைமுகத்தில் நுழைய தடைவிதிக்க வேண்டும். ஜப்பானில் தங்கியிருக்கும் வெளிநாட்டு அணு மற்றும் ஏவுகணைத் தொழில் நுட்ப வல்லுநர்கள் வட கொரியாவில் பயணம் மேற்கொண்டால், அவர்கள் மீண்டும் ஜப்பானுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்பவை இப்புதிய தடை நடவடிக்கைகளில் அடங்குகின்றன.