இதில் அவர் உரை நிகழ்த்துகையில், இப்பின்னணியில், சீனாவுடனான வர்த்தக முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், சீனாவின் வளர்ச்சியிலிருந்து பயன் பெறுவது, இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்று கூறினார்.
பல்வேறு இடங்களில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணி என்பதை அவர் அடிக்கடி குறிப்பிட்டார். அவர் கூறுகையில், இந்தத் திட்டப்பணி நேபாளத்தின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று நேபாளம் நம்பிக்கை கொள்கின்றது என்று கூறினார்.
பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்ட பிறகு, அவர் ஹைநான் மாநிலத்திற்குச் சென்று போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார். சீனாவின் புதிய உத்திநோக்கு மற்றும் ஆசியாவின் மறுமலர்ச்சி, அவரது உரையின் முக்கிய அம்சங்களாகும் என்று அவர் கூறினார்.