• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லான் சாங் மற்றும் மே காங் ஆற்றின் ஒத்துழைப்புக்கான தலைவர்களது முதலாவது கூட்டம்
  2016-03-23 20:01:28  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் லீ கெ ச்சியாங் 23ஆம் நாள் சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் சான்யா சர்வதேசக் கூட்ட மையத்தில் லான் சாங் மற்றும் மே காங் ஆற்றின் ஒத்துழைப்புக்கான தலைவர்களது முதலாவது கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
கம்போடியா, லாவோஸ், மியன்மார், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய ஐந்து நாடுகளும் சீனாவும் ஒத்துழைப்புக் கூட்டாளி மற்றும் நெருங்கிய நட்பார்ந்த அண்டை நாடுகளாகும் என்று லீ கெ ச்சியாங் தெரிவித்தார்.
லான் சாங் மற்றும் மே காங் ஆற்றின் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். இவை, பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் கூட்டு நாடுகளாகும். இந்த ஒத்துழைப்பு, தெற்கு தெற்கு ஒத்துழைப்புக்கான புதிய மாதிரியாகும். நடைமுறை நடவடிக்கைகளின் மூலம், 2030ஆம் ஆண்டில் ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை எட்டும் உறுதியைச் சீனா நடைமுறைப்படுத்தும்.
தற்போது, சீனா மற்றும் ஐந்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, சில புதிய அறைக்கூவல்களை எதிர்கொண்டுள்ள போதிலும், வலிமையாக வளர்ந்து வருகின்றது என்று லீ கெ ச்சியாங் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040