சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், மார்ச் 23ஆம் நாள் சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் சான்யா நகரில் நடைபெற்ற லான்சாங்-மேகாங் ஆறு ஒத்துழைப்புக்கான முதலாவது தலைவர்களின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அதன்பின், தாய்லாந்து, கம்போடிய, லாவோஸ், மியன்மார், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது, இக்கூட்டத்தில் எட்டியுள்ள பொது கருத்துக்களையும், சாதனைகளையும் லீ கெச்சியாங் எடுத்துக்கூறினார். அத்துடன், லான்சாங்-மேகாங் ஆறு ஒத்துழைப்பு அமைப்பு முறை, சீன-ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பைப் பொறுத்தவரை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.