போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழா, மார்ச் 24ஆம் நாள் சீனாவின் ஹாய்நான் மாநிலத்தில் நடைபெற்றது. சீனத் தலைமையமைச்சர் லீ கெ ச்சியாங் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.
ஆசிய நாடுகள் அமைதியையும் நிதானத்தையும் கூட்டாகப் பேணிகாக்க வேண்டும். பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றி, ஒன்றிணைந்த வளர்ச்சியை ஆழமாக்கி, திறப்பையும் பொறுமையையும் மேம்படுத்தி, புத்தாகக் உயிராற்றலைத் தீவிரமாக்குமாறு லீ கெ ச்சியாங் வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்காலத்தில், வெளிநாட்டு திறப்பு நிலையை உயர்த்த சீனா பாடுபடும். சேவைத் துறை, நாணயம் முதலிய துறைகளின் திறப்பை ஒழுங்கான முறையில் சீனா விரிவாக்கும் என்று லீ கெ ச்சியாங் கூறினார்.
சீனப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி, உலகத்திற்கு வாய்ப்பாகும். சீனாவின் வளர்ச்சி, ஆசிய நாடுகளுக்குப் பயன் தரும் என்று அவர் வலியுறுத்தினார்.