தொடர்புடைய நாடுகள், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம், சர்ச்சைகளைத் தீர்ப்பது, தென் சீன கடல் பிரச்சினையைத் தீர்க்கும் முக்கிய வழியாகும் என்று அவர் கூறினார்.
தென் சீன கடல் பற்றி பிலிப்பைன்ஸின் நடுவர் தீர்ப்பு வழக்கால், எனது நம்பிக்கை இழந்துள்ளது. இந்த வழக்கு, சட்டவிரோதமானது. இது பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று லியோசேன்மீன் சுட்டிக்காட்டினார்.
பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் சர்ச்சையைத் தீர்ப்பது தான், தென் சீன கடலின் அமைதியைப் பேணிக்காக்கும் வழிமுறையாகும். பல்வேறு தரப்புகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியது என்று இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெரும்பாலனோர் கருதியுள்ளனர்.