• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீன கடல் பற்றி சீனாவின் கருத்து
  2016-03-25 15:24:52  cri எழுத்தின் அளவு:  A A A   
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டுக் கூட்டத்தின் தென் சீன கடல் கிளையைச் சேர்ந்த சர்வதேச கருத்தரங்கு 25ஆம் நாள் ஹைநான் மாநிலத்தின் போ ஆவ்வில் துவங்கியது. 10க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் நூறு நிபுணர்களும் அறிஞர்களும், இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சீன துணை வெளியுறவு அமைச்சர் லியுச்சென்மின் இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டார். இதில், பேச்சுவார்த்தையின் மூலம் தென் சீன கடல் பற்றிய சர்ச்சையை அமைதியாக தீர்ப்பதில் சீனா ஊன்றி நிற்பது என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார்.

தொடர்புடைய நாடுகள், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம், சர்ச்சைகளைத் தீர்ப்பது, தென் சீன கடல் பிரச்சினையைத் தீர்க்கும் முக்கிய வழியாகும் என்று அவர் கூறினார்.

தென் சீன கடல் பற்றி பிலிப்பைன்ஸின் நடுவர் தீர்ப்பு வழக்கால், எனது நம்பிக்கை இழந்துள்ளது. இந்த வழக்கு, சட்டவிரோதமானது. இது பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று லியோசேன்மீன் சுட்டிக்காட்டினார்.

பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் சர்ச்சையைத் தீர்ப்பது தான், தென் சீன கடலின் அமைதியைப் பேணிக்காக்கும் வழிமுறையாகும். பல்வேறு தரப்புகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியது என்று இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெரும்பாலனோர் கருதியுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040