போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட சீன மற்றும் வெளிநாட்டு தொழிற்துறை வணிகம், நாணயம், சிந்தனை கிடங்கு மற்றும் செய்தி ஊடகங்களைச் சேர்ந்த துறையினர்கள், சீனத் தலைமையமைச்சர் லீ கெ ச்சியாங்உடன் 24ஆம் நாள் பிற்பகல், பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
சீன அரசு சார் தொழில் நிறுவனச் சீர்திருத்தம், புத்தாக்கம், சீனப் பொருளாதாரத்தின் மாற்றம், வெளிநாட்டுக்கான பொருளாதார ஒத்துழைப்பு, நடைமுறைப்படுத்தி வருகின்ற சர்வதேச அமைப்பு முறைமை முதலியவை இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளன.
சீனா, உலகப் பொருளாதாரத்தில் ஆழமாக பங்களித்துள்ளது. இதன் மூலம், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பு முறைமைகள் பயனடைந்துள்ளது என்று லீ கெ ச்சியாங் வலியுறுத்தினார். உலகின் பொருளாதாரம் சரிசமமாக வளர்ந்து, வளரும் நாடுகளின் கருத்து வெளிப்பாட்டுரிமையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.