2016ஆம் ஆண்டின் சர்வதேசத் தோட்டக் கலை கண்காட்சி ஏப்ரல் 29ஆம் நாள் சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் தாங்ஷான் நகரில் துவங்கியது. 50க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளன. இக்கண்காட்சிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன், தாங்ஷான் நகரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.