• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடல்சார் ஆராய்ச்சிக்கான செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக ஏவியது
  2016-04-29 16:10:44  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது கடல்சார் ஆராய்ச்சிக்கான 7ஆவது செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ் -1ஜி -யை வியாழக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் விண்ணில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த வெற்றியை இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பாராட்டினார்.

இந்த ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களின் குழுமம், அமெரிக்காவின் ஜிபிஎஸ், ரஷியாவின் குளோனஸ், ஐரோப்பாவின் கலிலியோ, சீனாவின் பெய்டுவைப் போன்றது என்று அகில இந்திய வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.

கடல்சார் ஆராய்ச்சிக்காக இந்தியா ஏற்கெனவே 6 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040