• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈராக்கில் அமெரிக்க துணை அரசுத் தலைவர் பயணம்
  2016-04-29 16:39:16  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க துணை அரசுத் தலைவர் ஜோசெப் பைடன் 28ஆம் நாள் ஈராக்கில் பயணம் மேற்கொண்டார். அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள ஈராக் அரசுக்கு ஆதரவளித்து, ஐஎஸ் அமைப்பின் மீதான தாக்குதல் குறித்து அந்நாட்டு அரசுடன் கலந்தாலோசிப்பது இப்பயணத்தின் நோக்கமாகும்.

தலைநகர் பாக்தாத்தில், பைடன் ஈராக் தலைமை அமைச்சர் ஹைதர் அல் அபாத் மற்றும் நாடாளுமன்ற தலைவர் சலிம் அல் ஜிபோரியுடன், ஐஎஸ் அமைப்பின் மீதான தாக்குதல் தொடர்பாக விவாதம் நடத்தினார். அதற்குப் பின் அவர் குர்தீஷ் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகருக்குச் சென்று, அப்பிரதேசத்தின் தலைவர் மசூட் மர்சானியைச் சந்தித்தார். ஐஎஸ் அமைப்பை ஒடுக்குவது பற்றி அவர்கள் விவாதித்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040