தலைநகர் பாக்தாத்தில், பைடன் ஈராக் தலைமை அமைச்சர் ஹைதர் அல் அபாத் மற்றும் நாடாளுமன்ற தலைவர் சலிம் அல் ஜிபோரியுடன், ஐஎஸ் அமைப்பின் மீதான தாக்குதல் தொடர்பாக விவாதம் நடத்தினார். அதற்குப் பின் அவர் குர்தீஷ் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகருக்குச் சென்று, அப்பிரதேசத்தின் தலைவர் மசூட் மர்சானியைச் சந்தித்தார். ஐஎஸ் அமைப்பை ஒடுக்குவது பற்றி அவர்கள் விவாதித்தனர்.