அமெரிக்காவின் துணை வெளியுறவு அமைச்சர் அன்டோனி புலின்கன் 28ஆம் நாள் பேசுகையில், ஐ.நா கடல் சட்டத்தின் ஒப்பந்தத்தில் சேரும் நாடான சீனா, ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மறுத்துள்ளதோடு, நடுவர் தீர்ப்பின் முடிவைவும் ஏற்றுகொள்ளவில்லை. சீனா இவற்றைச் செய்ய முடியாது என்று கூறினார்.
இது பற்றி ஹுவாசூன்யீங் பேசுகையில், தொடர்புடைய பிரச்சினைகள் பற்றி சீனா தனது நிலைப்பாட்டை பலமுறை தெரிவித்துள்ளது. தென் சீன கடல் பிரச்சினை, இயல்பில், தீவுகளின் உரிமை பிரதேசம் மற்றும் கடல் பரப்பு எல்லை சர்ச்சை ஆகும். பிலிப்பைன்ஸின் வேண்டுகோள், கட்டாய நடுவர் தீர்ப்பு வழங்கப்படும் நிலைக்கு எட்டவில்லை. நடுவர் தீர்ப்பு வழுவின் உருவாக்கத்திற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று கூறினார்.