• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீன கடல் பற்றி பேசும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை
  2016-04-30 13:52:15  cri எழுத்தின் அளவு:  A A A   
தென் சீன கடல் பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாசூன்யீங் அம்மையார் 29ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கருத்து தெரிவித்தார். ஐ.நா கடல் சட்டத்தின் பொது ஒப்பந்தத்தில் அமெரிக்கா சேரவில்லை. தென் சீன கடல் பற்றி பிலிப்பைன்ஸ் வழங்கிய நடுவர் தீர்ப்பு வழக்கின் சாராம்சத்தையும் நடுவர் தீர்ப்பு நீதி மன்றம் அதிகாரத்தை மீறி தீர்ப்பு அளிக்கும் உண்மையையும் அமெரிக்கா பொருட்படுத்தவில்லை. இப்பிரச்சினையில், சீனா பற்றி இல்லாததை பேசும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் துணை வெளியுறவு அமைச்சர் அன்டோனி புலின்கன் 28ஆம் நாள் பேசுகையில், ஐ.நா கடல் சட்டத்தின் ஒப்பந்தத்தில் சேரும் நாடான சீனா, ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மறுத்துள்ளதோடு, நடுவர் தீர்ப்பின் முடிவைவும் ஏற்றுகொள்ளவில்லை. சீனா இவற்றைச் செய்ய முடியாது என்று கூறினார்.

இது பற்றி ஹுவாசூன்யீங் பேசுகையில், தொடர்புடைய பிரச்சினைகள் பற்றி சீனா தனது நிலைப்பாட்டை பலமுறை தெரிவித்துள்ளது. தென் சீன கடல் பிரச்சினை, இயல்பில், தீவுகளின் உரிமை பிரதேசம் மற்றும் கடல் பரப்பு எல்லை சர்ச்சை ஆகும். பிலிப்பைன்ஸின் வேண்டுகோள், கட்டாய நடுவர் தீர்ப்பு வழங்கப்படும் நிலைக்கு எட்டவில்லை. நடுவர் தீர்ப்பு வழுவின் உருவாக்கத்திற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040