• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்து மாக்கடல் பாதுகாப்பு பற்றி இலங்கை வெளியுறவு அமைச்சரின் கருத்து
  2016-04-30 15:11:09  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்து மாக்கடல் பிரதேசத்தின் அமைதி, பல்வேறு நாடுகளால் கூட்டாகப் பேணிக்காக்கப்பட வேண்டும் என்று பெய்ஜிங்கில் ஆசிய தொடர்பு மற்றும் நம்பிக்கையை முன்னேற்றும் அமைப்பின் 5ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, 29ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் நல்ல புரிதல் மற்றும் நம்பிக்கை உண்டு. சீனாவுடன் இணைந்து பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொள்ள இலங்கை விரும்புகிறது. அதே வேளையில், வேறு நாடுகளுடன் பாதுகாப்புத் துறையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இந்து மாக்கடல் பிரதேசத்தின் அமைதியைக் கூட்டாகப் பேணிக்காக்கும் என்று கூறினார்.

ஆசியாவின் வளர்ச்சியுடன், உலகில் இந்து மாக்கடலின் தகுநிலை மென்மேலும் உயர்ந்துள்ளது. இந்து மாக்கடல் பிரதேசத்தின் பாதுகாப்பு, உலக பொருளாதாரத்துடன் தொடர்புடையது என்று அவர் கருத்து தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040