அவர் பேசுகையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் நல்ல புரிதல் மற்றும் நம்பிக்கை உண்டு. சீனாவுடன் இணைந்து பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொள்ள இலங்கை விரும்புகிறது. அதே வேளையில், வேறு நாடுகளுடன் பாதுகாப்புத் துறையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இந்து மாக்கடல் பிரதேசத்தின் அமைதியைக் கூட்டாகப் பேணிக்காக்கும் என்று கூறினார்.
ஆசியாவின் வளர்ச்சியுடன், உலகில் இந்து மாக்கடலின் தகுநிலை மென்மேலும் உயர்ந்துள்ளது. இந்து மாக்கடல் பிரதேசத்தின் பாதுகாப்பு, உலக பொருளாதாரத்துடன் தொடர்புடையது என்று அவர் கருத்து தெரிவித்தார்.