போர் நிறுத்தம் பற்றி ஐ.நா., ரஷியா, அமெரிக்கா வேண்டுகோள்
2016-05-03 11:03:13 cri எழுத்தின் அளவு: A A A
ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கீ முன் 2ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், சிரியாவின் அலேபோ பகுதியில் தீவிரமடைந்து வரும் போர் நிலைமை குறித்து கவலை தெரிவித்தார். அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில் போரில் ஈடுபட்டு வரும் பல்வேறு தரப்புகளும் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். அதேநாள் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரொவ் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சிரியா நிலைமை பற்றி ஆலோசித்தார். மோதலில் சிக்கியுள்ள சிரியாவின் பல்வேறு தரப்புகளும் போர் நிறுத்த அமைப்பு முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். தவிரவும், ஜான் கெர்ரி ஜெனிவாவில் பேசிய போது, போர் நிறுத்தத்துக்கான வாக்குறுதியை சிரியாவின் பல்வேறு தரப்புகளும் கடைபிடித்து, உள்நாட்டின் பாதுகாப்பு மற்றும் மனித நேய நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்றும், விரைவில் தொடங்க உள்ள அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைவதற்கு உரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய