பிரான்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், மாலேகன் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டது. அது, மும்பைக் கடற்பரப்பில் தனது முதலாவது பயிற்சியைத் தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்வேறு பயிற்சிகள் மற்றும் சோதனைக்குப் பிறகு, இக்கப்பல் இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட உள்ளது. இது, நரேந்திர மோடியின் இந்தியாவிலேயே தயாரிப்போம் திட்டத்துக்கு அதிக ஊக்கத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.