கியூபா தலைநகரான ஹவானாவை சென்றடைந்துள்ள அமெரிக்க சுற்றுலா கப்பல்
700க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் அஞ்சல் கப்பல் ஒன்று, அமெரிக்காவின் மியோமியிலிருந்து, கியூபா தலைநகரான ஹவானாவுக்குப் புறப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் செய்தி ஊடகம் மே திங்கள் முதல் நாள் அறிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டின் மார்ச் திங்கள் 15ஆம் நாள், அமெரிக்க மக்கள், கியூபாவிற்குச் செல்லும் சுற்றுலா கட்டுப்பாட்டை தளர்த்தி அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
2015ஆம் ஆண்டின் ஜூலை திங்களில், இரு நாடுகளும் தூதாண்மை உறவை அதிகாரப்பூர்வமாக மீட்டெடுத்துள்ளன. அதே வேளையில் 50க்கு ஆண்டுகளுக்கு மேலான கியூபாவின் முற்றுகையை அமெரிக்கா இன்னும் பன்முகங்களிலும் நீக்க வில்லை.