அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா அண்மையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், அமெரிக்காவின் தலைமையில் உருவாக்கப்படும் திபிபி முறை உயர்நிலை வரையறைகளை நடைமுறைப்படுத்தும். இதன் மூலம், 21ஆவது நூற்றாண்டு உலக வர்த்தகை விதிமுறை அமெரிக்காவினால் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூற்று பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லேய் பேசுகையில், உலக வர்த்தக விதிமுறை, உலக நாடுகளால் கூட்டாக ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட வேண்டும். அது ஒரே தரப்பினால் வகுக்கப்படுவதல்ல. டிபிபி பிரச்சினையில் சீனா திறந்த மனப்பான்மையை வெளிக்காட்டுகிறது. டிபிபி ஒப்பந்தமோ அல்லது ஆர்சிஈபி ஒப்பந்தமோ, ஒன்றை ஒன்று ஊக்குவிப்பு அளித்து, ஆசிய-பசிபிக் சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்கும் இலக்கை நனவாக்க உதவ வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
பிரதேச அளவிலான பன்முகமான பொருளாதாரக் கூட்டாளி என அழைக்கப்படும் ஆர்.சி.ஈ.பி ஒப்பந்தம், ஆசியான் நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆசியான் உறுப்பு நாடுகள், சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா இந்தியா உள்ளிட்ட நாடுகள் இதில் சேர திட்டமிடப்பட்டுள்ளது. பசிபிக் பொருளாதார கூட்டாளி எனும் டிபிபி ஒப்பந்தம், 2005ஆம் ஆண்டு சிலி, நியூசிலாந்து, சிங்கப்பூர், புருணை ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு அமெரிக்கா இதில் சேர்ந்துள்ளதாக அறிவித்தது.